பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வரைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தபோது திடீரென பஞ்சாப் முதல்வரின் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர்

Update: 2022-01-06 15:15 GMT

சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வர் படத்தை எரித்து பிஜேபி இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நேற்று பஞ்சாபிற்க்கு செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அம்மாநில முதல்வர் மற்றும் சோனியா காந்தியை கண்டித்து மாநில அளவில் மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பஞ்சாப் முதல்வரை கண்டித்து காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், திடீரென பஞ்சாப் முதல்வர் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர்.

இதில் இளைஞரணி நிர்வாகிகள் மயில்வாகனன், கதிரவன், பிரபாகரன், மாவட்ட நிர்வாகி சுகனேஸ்வரி, ஒன்றிய தலைவர் அழகர், இளைஞரணி ஒன்றிய தலைவர்கள் ஆனந்த்,சுரேஷ், பிரிதிவிராஜ், நிர்வாகிகள் நவீன், அருண் இளைஞரணி மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News