சிவகங்கையில் விழிப்புணர்வு கண்காட்சி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழா.

Update: 2021-08-26 09:45 GMT

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களையும், தியாகிகளையும், இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, சிவகங்கை அருங்காட்சியகம், சென்னை காந்தி அமைதி நிறுவனம் மற்றும் கலைமகள் ஓவிய பயிற்சி மையமும் இணைந்து கண்காட்சியை நடத்தியது.

இக்கண்காட்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை இளைய தலைமுறையினர் மறவாமல் நினைவு கூறும் வகையில், மாரத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்பு கொரானாவிற்காக நிதி உதவி புரிந்து சேவைகள் செய்த கலைமகள் ஓவிய பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

Similar News