காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பிப் 3 ல் சென்னையில் முறையீடு போராட்டம் நடத்த மனு

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2022-01-23 06:15 GMT

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல்நோக்கு பணியாளர்கள் பிப்ரவரி 3ல் சென்னையில் முறையீடு போராட்டம் நடத்தப்படும் என மனு அளித்தனர்

சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்  வழங்க கோரி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் 9 ஆண்டாக 3,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர் பல்நோக்கு மருத்துவமனைகளில் 5 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் சம்பளம் வழங்கக்கோரி 2018 சுகாதார இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து சுகாதார செயலரிடம் கோரிக்கை வைத்தோம். இந்நிலையில் 2021 டிசம்பரில் வெளியான உத்தரவில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காலம் வரை சம்பளம் வழங்கக்கோரி பிப்ரவரி 3ல் சென்னையில் முறையீடு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News