சிவகங்கை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு அஞ்சலி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு சிவகங்கை அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்

Update: 2021-08-06 14:41 GMT

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு அஞ்சலி 

சிவகங்கை அதிமுக  சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில்  மதுசூதனன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்மணி பாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News