மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார்

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார் மனு

Update: 2021-09-20 18:15 GMT

தாக்குதல் நடத்திய காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது, கொலை முயற்சி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர்  முத்துகழுவன் வழிகாட்டுதலின் படி, காளையார்கோவில் காவல் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை, விசாரணைக்காக  காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் நடத்தியதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது மற்றும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் மற்றும் நற்புதம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News