தேர்தல் விதிமுறை மீறல்: கோரவிபத்து

20 பேர் மட்டுமே செல்லக்கூடிய டாட்டா ஏஸ் வாகனத்தில் 50 பேருக்கு மேல் ஏற்றி வந்தனர்.

Update: 2021-03-26 13:04 GMT

சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டத்துக்கு விதிமுறை மீறி வரவேற்க சென்றதால் சிவகங்கை பைபாஸ் ரோடு அருகே கோரவிபத்து

சிவகங்கைக்கு வாக்கு சேகரிக்க வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக 20 பேர் மட்டுமே செல்லக்கூடிய டாட்டா ஏஸ் வாகனத்தில் 50 பேருக்கு மேல் ஏற்றி வந்ததால் வாகனம் விபத்துக்குள்ளாகி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் கை கால்கள் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அப்போது கல்லல் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்து வந்த அமமுக வேட்பாளர் அன்பரசன் தகவல் அறிந்ததும் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

Tags:    

Similar News