சிவகங்கை: கண்மாய் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

7 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் வரத்துக் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-07-12 10:06 GMT

கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் வரத்துக் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் வரத்துக் கால்வாய் பூமிதான நிலம் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி கண்மாய் தண்ணீரை முற்றிலும் அடைத்து கண்மாய் நீரை தனது சொந்த நிலத்துக்கு பயன்படுத்தி வரும் முருகேசன் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  ஏழு கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News