சிவகங்கை மாவட்டத்தில் 241 அரசு பேருந்துகள் இயக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 5 போக்குவரத்து கிளைகள் முலமாக, இன்று மொத்தம் 241 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் இன்று முதல், மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, இன்று காலையில் இருந்து சிவகங்கைமாவட்டத்தில் உள்ள 5போக்குவரத்து கிளைகள் முலமாக நகரபுறங்கள் மற்றும் கிராமபுறங்களுக்கு மொத்தம் 241 பேருந்துகள் இயக்கபடுகினறன.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கும், மதுரை, ராமநாதபுரம், தொண்டி, காரைக்குடி ராமேஸ்வரம் உள்ளிட்ட பலபகுதிகளுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் ஆர்வமுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர், உரிய வழிமுறை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பயணம் செய்தனர். முன்னதாக, பஸ்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.