மாஸ்க் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு

Update: 2021-03-22 09:15 GMT

திருப்பத்தூர் நகரில் மாஸ்க் அணிவதின் கட்டாயம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் அண்ணா சாலையில் காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஒன்றிணைந்து மோட்டார்பைக்கில் வந்த வாகன ஓட்டிகளிடம் மாஸ்க் அணிவதின் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு நடத்தினர். தற்சமயம் கொரோனா வைரசின் இரண்டாம் கட்ட அலையாக நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் அனைவரும் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்து சுகாதாரத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்பி., உத்தரவுக்கிணங்க திருப்பத்தூர் நகரில் மக்கள் கூடும் பகுதிகள், மற்றும் வாகன ஓட்டிகளிடம் போலீசாரால் நோய்த்தொற்று பரவலை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயம் என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் வரும் தினங்களில் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News