தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Update: 2021-06-04 14:57 GMT

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தென் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர.

தமிழகத்தில் கொரானா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட தளவில்லா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களும் அடங்குவர். இவர்கள் தங்களது JCB இயந்திரத்திற்காக நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணை தொகை, அதற்கான வட்டி, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணம்,காப்பீட்டு தொகை ஆகியவற்றை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் அளித்தனர்.

Tags:    

Similar News