முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டத்தில் 12845 மனுக்கள் : சிவகங்கை ஆட்சியர் தகவல்

முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டம்- மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-05 11:58 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மனுக்கள் பெரும் திட்டத்தில் 12845 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்கள் பெரும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 12,845 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற உங்கள் தொகுதி முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உங்கள் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் தனி துரை அமைத்து அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் 100 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். அதன்படி சிவகங்கை மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து துறைகளில் மூலம் 12845 மனுக்கள் பெறப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மனுதாரரின் முகவரிக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விண்ணப்பதாரரின் தன்மைக்கேற்ப நிறைவேற்றக்கூடிய பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News