ஒளிப்பதிவு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எம்பி- கார்த்திக் சிதம்பரம்

Update: 2021-07-08 12:41 GMT

திரைத்துறைக்கான ஒளிப்பதிவு சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எம்பி கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கபட்ட நிலையில் இன்று  சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பின்னர், எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலிங்கை முறையாக நடத்த வேண்டும்,மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் எந்த ஒரு அமைச்சருக்கும் அதிகாரம் இல்லை. பிரதமர் மோடிக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. அதனால் அமைச்சர வையை மாற்றுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

திரைதுறையில் ஒளிப்பதிவு சட்டத்தை கொண்டு வந்ததற்கு திரைத்துறையின் அனைத்து பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஒளிப்பதிவு சட்டம் நடைமுறைக்கு வராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே அந்தச்சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

Tags:    

Similar News