மூச்சை வைத்து சம்பாதித்த பலூன் வியாபாரி மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

சிவகங்கையில் பலூன் வியாபாரி மூச்சுத்திணறலால் சாலையோரம் அமர்ந்த நிலையில் உயிரிழந்தார்.

Update: 2021-06-07 15:06 GMT

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் ராமச்சந்திரன். (55).மாற்றுத்திறனாளியான இவர் பலூன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவர் கால் வலிக்கு சிகிச்சை பெற  தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை அருகிலேயே சாலையோரம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்த நிலையில் ராமசந்திரனின் உயிர் பிரிந்துள்ளது. .தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் வந்து ராமச்சந்திரனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அங்கு வந்த ராமச்சந்திரனின் உறவினர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும்  மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள மறுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News