துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு

Update: 2021-03-02 07:30 GMT

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கையில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்வும் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் தேர்தல் நேரங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்கவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ரானுவப்படையினர் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து துணை ரானுவப்படையினர் மற்றும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 50 துணை ரானுவ வீரர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களின் அச்சத்தை போக்கும் விதமாக கொடி அணிவகுப்பை நடத்தினர்.

Tags:    

Similar News