கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்

Update: 2021-02-22 11:30 GMT

சிவகங்கையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக தினசரி பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் ஏறி வருகிறது. இதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் திமுக தென்னவன் முன்னிலையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் நூதன முறையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதற்கு பாடை கட்டி தூக்கி வந்ததுடன் அதனை சுற்றி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News