குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

Update: 2021-01-23 05:30 GMT

சிவகங்கை மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியானார்கள்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை அடுத்துள்ள பாகனேரியை பூர்வீகமாக கொண்டு தற்சமயம் விருத்தாச்சலம் பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். இவரது பத்து வயது பெண் குழந்தை ஸ்ரீநிதியும், அதேபோல் சென்னை மாங்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் வைரவமுத்து. இவரது பெண் குழந்தை வைஷ்ணவி. இவர்கள் இரு குடும்பத்தினரும் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவர்களது தாயார் இருவரும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு பெண் குழந்தைகளும் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கிய நிலையில் தாயார் இருவரும் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த கிராம மக்கள் இரு குழந்தைகளையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய நிலையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News