ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Update: 2021-01-08 08:00 GMT

காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோயில் மற்றும் பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் நாள்தோறும் உள்ளூர் , வெளி மாவட்ட பொதுமக்கள்,வெளி மாநில சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால் சாலை விரிவாக்கம் , மேம்பாலம் என எதையும் செய்ய இயலாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் , பண்டிகை திருமண நாட்களில் மிக நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதை தவிர்க்க முதல் கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி., ஷண்முக பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் மைதானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நெரிசல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் , ஆட்டோக்களுக்கு முறையான காவல் நிலைய அனுமதி ஸ்டிக்கர் ஒட்டி முறைபடுத்தும் பணியை துவக்கினார். காஞ்சிபுரத்தை சிறந்த நகரமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags: