பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை
நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.
திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி நெட்டுதெரு முனிசிபல் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி கம்பபாறை குவாரி குளத்தில் துணி துவைப்பதற்காக கையில் பையுடன் இறங்கிய போது பாறையில் வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.