கொரோனா வார்டில் இருந்து பெண் நோயாளி ஓட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தப்பியோடியது, திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-01-16 01:00 GMT

கோப்பு படம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  கொரோனா தொற்று நோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை  சேர்ந்த 27 வயது பெண், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், திடீரென சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News