திண்டுக்கல் -கருப்பு பூஞ்சை நோயுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-05-29 05:24 GMT

திண்டுக்கல் அரசு மருத்துவமனை - கோப்பு படம்

இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகம் பரவி வரும் சூழ்நிலையில், தமிழகத்திலும் அதிக பாதிப்பு உள்ளது. அதேபோல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அச்சுறுத்தலாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 22, 162 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு, கண்கள் அருகே கருப்பு கருவளையம் போல் இருந்து உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், அவர்கள் ஐந்து பேருக்கும் பரிசோதனை செய்த மருத்துவர்கள்,    ஐந்து நபர்களின் மாதிரியை எடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மதுரை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவில்,  மூன்று நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் வேடசந்தூர் மற்றும் சின்னாளபட்டியை சேர்ந்த 50 வயதுக்கு மேல் உள்ள மூன்று நபர்களுக்கு, கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டுள்ளது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News