நீ பாதி..நான் பாதி.. யார் பிரிந்தாலும் வேதனை பாதி; சாவிலும் இணைபிரியா தம்பதி
திண்டுக்கல்லில் கணவன் இறந்ததால் மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
''தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதைப் நான் பார்த்தது உண்டு'' என்ற வரிகளுக்கு ஏற்ப தனது கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் திண்டுக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (57). இவர் நேற்று இரவு காலமானார். அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி சாந்தி (49) இன்று காலை காலமானார்.
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நீ ஒரு பாதி.. நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி என நினைத்து சாவிலும் இணைபிரியாத தம்பதிகளை பார்த்து அந்த பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர்.