திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஊராட்சிகளில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது

Update: 2021-08-30 11:36 GMT

திண்டுக்கல் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழா 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திண்டுக்கலில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஊராட்சிகளில் கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, சோலைஹால்  ரோடு பகுதியிலுள்ள கணபதி கோவில் அருகே  நடைபெற்றது .  விழாவுக்கு,  மாவட்ட தலைவர் அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணை செயலாளர் வேளாங்கண்ணி, கிழக்கு மாவட்ட செயலாளர் ரூபன் சுந்தர், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் செல்வ பாண்டி, மேற்கு மாவட்ட அமைப்பாளர் தண்டபாணி , மத்திய மாவட்ட துணைத்தலைவர் பவுல்ராஜ், மகளிரணி ஒன்றிய தலைவி சுமதி மற்றும் சாந்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News