தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
தன்னார்வலர்கள் உதவியுடன் 173 நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் வர்த்தகர் சங்கம் சார்பாகவும், கொடைரோடு சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சார்பாகவும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என மொத்தம் 173 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, எண்ணெய் 1/2 லிட்டர், துவரம் பருப்பு 1/2 கிலோ, பாசிப் பருப்பு 1/2 கிலோ, காய்கறிகள் 6 கிலோ, பழங்கள் 2 கிலோ ஆகிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி உடன் இருந்தார்கள்.