திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
திண்டுக்கல் மாலையடிவார சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை சிறப்பாக நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கருடா வாகனம் மீது பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக பரமப வாசல் திறப்பில் நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், ராமானுஜர் எதிர் சேவை செய்த போது கோவிந்த கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.