பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரித்பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர்பெரிய பள்ளிவாசலில் நகரின் பல இடங்களில் இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.
இந்த சிறப்பு தொழுகையில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை மூன்றாக பிரித்து தங்களுக்காகவும், உறவினர்கறைக்காக மற்றென்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.