பூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள் வேதனை

திண்டுக்கல்லில் பூக்கல் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் சில்லறை விற்பனை மந்தமாக உள்ளது.

Update: 2021-07-23 03:33 GMT

திண்டுக்கல் மலர் சந்தை

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, வெள்ளோடு, செம்பட்டி, மயிலாப்பூர், ஆவாரம்பட்டி, தாடிக்கொம்பு, கோவிலூர், பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,

இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் பூக்களின் வரத்துகேற்ற நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் பூக்கள் விலை கிடைத்த போதிலும், அதை வாங்கி சில்லரை விற்பனை செய்பவர்களுக்கு விலை கிடைத்தாலும் விற்பனை அதிகளவில் இல்லை. கடந்த காலங்களில் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும் என்பதால் பூக்களில் வரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதோடு அதிகமான விற்பனையும் நடைபெறும்.

ஆனால் தற்போது கோவில்களில் வழிபாட்டிற்கு திறந்தபோதிலும் ஆடி மாத திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லாததால் பூக்கள் விலை கிடைத்தும் விற்பனை குறைவாக உள்ளதாக சில்லரை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு   கடைகள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் பூ வியாபாரிகளுக்கும் அரசு பரிசீலனை செய்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இன்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 250 ரூபாய்க்கும் , சம்பங்கி 100 ரூபாய்க்கும், ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 80 ரூபாய்க்கும், துளசி ஒரு கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News