ரயில்வே மேம்பாலப் பணிகள்: திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் திடீர் ஆய்வு
. பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இப்பாலத்தை சுற்றியுள்ள மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்
ரயில்வே மேம்பால பணிகளை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இப்பாலத்தை சுற்றியுள்ள மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார் .
உடன் வந்த அதிகாரிகளிடம் பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுருத்தினார். பணியில் ஏற்படும் இன்னல்கள் குறித்து கேட்டறிந்தார் . இந்நிகழ்வில், ஒன்றிய திமுக செயலாளர் த.நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் அ.ராஜா மற்றும் தி மு க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.