வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் அவதி

தொடர் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீருடன் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் புகுந்தது

Update: 2022-01-02 08:30 GMT

திண்டுக்கல் அருகே  சின்ன பள்ளப்பட்டி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன பள்ளப்பட்டி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. பள்ளபட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பரமன் என்பவர் இருந்து வருகிறார். பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன பள்ளப்பட்டியில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீருடன் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் புகுந்ததுள்ளது.

இப்பகுதியைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீரும் மழை நீரில் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு முழுவதும் ரோட்டிலே தஞ்சம் அடைந்த நிலை காணப்பட்டது.இதனைத் தொடர்ந்து மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவு நீரும் கலந்துள்ள நீரை வெளியேற்றி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை சரி செய்து தரும்படி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பெண்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் பள்ளபட்டி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பேசி, உடனடியாக சரி செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழை நீர் விடுவது குறித்து பலமுறை திமுக தலைவர் பரமனிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இரவு பகலாக பெய்த தொடர் மழை காரணமாக சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி பகுதிகளில் வசிக்கக்கூடிய 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைநீரில் தோல் தொழிற்சாலை கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News