பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-08-27 10:27 GMT

வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர்.

முதல் அலை, இரண்டாம் அலை என வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போது  குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும், அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களை வரவேற்கும் விதமாகவும், அதே போல் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியும், மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் கிருமிநாசினி மருந்துகளும் தற்போது தெளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News