மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்ப மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 25 இடங்களுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்தார்

Update: 2021-12-07 08:43 GMT

திண்டுக்கல் மாநகராட்சித்தேர்தலில்  போட்டியிய மாநில பொருளாளர் திலகபாமாவிடம் விருப்ப மனு அளித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம்  விருப்பமனு பெறும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பாண்டியன் நகரில் உள்ள திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமாவிடம்,தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தங்களது விருப்ப மனுக்களை வழங்கினர்.

இது குறித்து மாநில பொருளாளர் திலகபாமா கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 25  வார்டுகளுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும். அந்த இலக்கை நோக்கியே எங்களது கட்சியின் செயல்பாடுகளும் தொண்டர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும் என தெரிவித்தார். இதில் ஏராளமான கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

Tags:    

Similar News