எம்ஜிஆர் நினைவு நாள்: அதிமுகவினர் உருவச்சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-24 15:45 GMT

எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவச்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின்  34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர்  உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் ,வேடசந்தூர் ,திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த சார்பு அணி நிர்வாகிகள் ,மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News