கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்புகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது

Update: 2022-01-30 01:12 GMT

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் 

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாசிப் பெருந்திருவிழா குறித்த முக்கிய அறிவிப்பினை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

மாசிப் பெருந்திருவிழா காலங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாக கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பூக்குழி உட்பட அனைத்து நேத்தி கடன்களும் வழக்கம் போல செய்யலாம். பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை.

கோவில் வளாகத்திற்குள் கடைகள்,  பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கொடிமரத்திற்கு காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தண்ணீர் ஊற்ற அனுமதி அளிக்கப்படும் 

தினந்தோறும் அம்மன் நகர் உலா மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் முடிக்க வேண்டும். தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு திருக்கோவில் நடை சாத்தப்படும் என பரம்பரை அறங்காவலர்கள் அறிவித்துள்ளனர் 


கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News