அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை 14 ஆண்டுக்கு நிரம்பியது
சாணார்பட்டி அருகே, அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
தொடர் மழை காரணமாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அணை தனது முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அணையை உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.