திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-12-05 16:34 GMT
நினைவு நாளையொட்டி திண்டுக்கல்லில் ஜெயலலிதா உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

தமிழகத்தின் மறைந்த முதல் வரும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் மருத ராஜ் தலைமையில் மத்திய கூட்டு றவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்ரமணி, முரளிதரன் மற்றும் மத்திய கூட்டுறவு நகரத் தலைவர் பிரேம்,போக்குவரத்து மண்டல செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News