மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .

வத்தலகுண்டு அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

Update: 2021-12-15 13:05 GMT

மனைவியை கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ராபியா (வயது 38). இவரது கணவர் ஹபீப் ரஹ்மான். இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 5 .10 .2017 அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ஹபிப் ரஹ்மன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராபியாவின் தலையில் அடித்து கொலை செய்தார்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது வழக்கை விசாரித்த நீதிபதி புருசோத்தமன் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஹபீப் ரகுமானுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News