திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து‌ ஓட்டுனர்கள், நடத்துனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-24 00:35 GMT

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தமிழக அரசு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

குறைந்தபட்ச கூலி சட்டபடி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றோர் பண பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிமனைகளிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து‌ ஓட்டுனர்கள், நடத்துனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News