அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கப்பட்டது.

Update: 2021-07-18 09:02 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில்,  பாலசமுத்திரம், குரும்பப்பட்டி 14- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு, ஊட்டச்சத்துக்காக முருங்கை சூப் வழங்கப்பட்டது. பழனி அரசு சித்தா பிரிவு மற்றும் ஸ்ரீ நேசா பவுண்டேசன் சார்பாக,  கொரோன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முருங்கை சூப் தயாரித்து தரப்பட்டது.

இதில், பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன், தேவஸ்தானத்தை சேர்ந்த மாரிமுத்து, மகேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வுக்கு வேல்மணி ஏற்பாடு செய்திருந்தார். சித்த மருத்துவமனை சார்பில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம்  மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News