திண்டுக்கல்: ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்,நடத்துனர் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-05-25 09:53 GMT

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தனருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி எந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று பணிமனை மற்றும் நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, வத்தலகுண்டு, ஆகிய பணிமனையில் பணிபுரிகின்ற ஓட்டுநர் நடத்துனர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் அவர்களது குடும்பத்தார் ஆகியோருக்கு இன்று  முதல் கட்டமாக திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் 500பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு பயனடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News