திண்டுக்கல்லில் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி போலீசார் வழங்கல்

திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் முடித்திருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

Update: 2021-06-09 15:40 GMT

திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த முடித்திருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

 திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர்கள் பலருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

இதையடுத்து நிவாரணப் பொருட்கள் பெற்றவர்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக தொழில் செய்யாததால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த காலத்தில் உறவினர் கூட உதவாத நேரத்தில் போலீசார் எங்களை அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியது. மனதுக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக உள்ளது, என்றனர்.

Tags:    

Similar News