திண்டுக்கல்: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினர் கருப்புக்கொடி போராட்டம்

மக்கள் விரோதப்போக்கை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது

Update: 2021-09-20 09:08 GMT

மத்தியஅரசைக்கண்டித்து  திண்டுக்கல்லில் திமுக தலைமையில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டணிகட்சியினர்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் திமுக மாவட்ட கட்சி அலுவளகம் முன்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற மறுப்பது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத போக்கை கண்டித்து திமுக , காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், வி சி க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுகவின்  முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News