திண்டுக்கல்லில் கொரோனா விதி மீறல் : ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல்லில் ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகள் மீறியவர்களிடம் இருந்து இதுவரை போலீசார் ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது
காவல்துறையினர் தேவையின்றி சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
11 சோதனைச் சாவடிகள், 37 இடங்களில் வாகன தணிக்கைகள் நடந்தன. கடந்த மே 10 முதல் நேற்று முன்தினம் வரை 5000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாத 56 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதித்து ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
வாகன உரிமையாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர் இனியும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்தனர்.