திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பணிக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஜய லெட்சுமி தெரிவித்தார்.

Update: 2021-05-28 23:00 GMT
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதற்காக மாநில,மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநில அளவிலான குழுக்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் tango coordination@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் http://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சமூக நல அலுவலரை 0451-2460092 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் dswodindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News