திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி

திண்டுக்கல் அருகே, நீச்சல் பழக சென்ற போது, ஆற்று மணல் குழியில் சிக்கி, இரு குழந்தைகள் உள்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-30 14:18 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

திண்டுக்கல் அருகே உள்ள ஆர்விஎஸ் பாறைப்பட்டி பகுதியில் சந்தனவர்தினி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் சுமார் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு மணல் திருடர்களால் தோண்டப்பட்ட குழிகள் ஆங்காங்கே உள்ளன. 

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி அர்ச்சனா, சக்திவேலின் உறவினர் மகள்கள் சத்யா பாரதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர், நீச்சல் பழகுவதற்காக ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களில் குழந்தை, ஆற்றின் மணல் குழியில் சிக்கிக் கொண்டார்.

அந்த குழந்தையை காப்பாற்ற அடுத்தடுத்த மூவரும் உள்ளே இறங்கிய போது, நான்கு பேரும் மணல் குழியில் சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ளனர். மணல் கொள்ளையர்கள் தோண்டப்பட்ட குழி மூடாமல் சென்றதால், தற்போது நான்கு அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.

ஆற்றில் மூழ்கி நால்வர் உயிரிழந்த சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News