திண்டுக்கல்லில் பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று

திண்டுக்கல் தனியார் பள்ளியில் பயின்று வரும் பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-09-07 04:42 GMT

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி பயிலும் திண்டுக்கல் தனியார் மெட்ரிக் பள்ளி.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதி. உடன் பயின்ற 17 மாணவிகள் 3 ஆசிரியர்கள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒன்பதாவது முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11வது வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வகுப்பறையில் உடன் அமர்ந்திருந்த 17 மாணவிகள் மற்றும் மூன்று ஆசிரியருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தொற்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு வைரஸ் தொற்று இருந்த நிலையில், அவருக்கும் பரவியுள்ளதாக என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News