திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருட்டு

திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-01-16 12:00 GMT

திருடு நடந்த வீடு. 

திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஃபிக் (வயது 46). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் பாலகிருஷ்ணாபுரம் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது உள்ளே சென்று பார்த்த போது,  வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஒரு கலர் டிவியை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள்,  பூட்டை உடைத்து, டிவி மட்டும் ரொக்கப் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. ரபிக், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News