அதிமுகவில் இணைந்த வத்தலகுண்டு தேமுதிகவினர்
வத்தலகுண்டு தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
வத்தலகுண்டு தேமுதிக ஒன்றிய செயலாளர் கோபிராஜா, துணை செயலாளர்கள் ராஜாமணி கணேசன், சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் பாண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் தலைமையில், அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
உடன் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் அருண்குமார், ஒன்றிய துணை செயலாளர் துரைராஜ், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் பாண்டிராதா, மாவட்ட விவசாய அணி தலைவர் மனோகரன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், சேவுகம்பட்டி நகர பொருளாளர் பாண்டியன், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.