திண்டுக்கல் மின் மயானத்தை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள்

சட்டர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

Update: 2021-05-13 10:43 GMT

திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மின்மயானத்தில் சட்டர் கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் புகை வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர், மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மற்றும் அலுவலர்கள் மின் மயானத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, தற்போது கொரோனா 2-வது அலையில் இறப்பு விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Tags:    

Similar News