திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திண்டுக்கல்லில், பொறியாளர் மதன்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

Update: 2022-01-07 23:45 GMT

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர். 

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில்,  கோட்ட பொறியாளர் மதன்குமார், ஒப்பந்தக்காரர்கள் செய்த பணிகளுக்கு,  நிதி வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு இணைந்து, நேற்றிரவு திடீரென சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மதன்குமார் அறையில் இருந்து, கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து,  விசாரணை நடக்கிறது. இச்சம்பவம், திண்டுக்கல்லில் பரபரபப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News