கலை திறமையை காட்டி பசியை போக்கி கொள்ளும் ஓவியர்

சாலையில் கண்டவரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்காமல், தன்னுள் இருக்கும் கலை திறமையை காட்டி தனது அன்றாட பசியை போக்கி கொள்ளும் ஓவியர்.

Update: 2021-07-22 15:58 GMT

சாலையோர சுவற்றில் கரித்துண்டுகளை கொண்டு ஓவியம் வரையும் முதியவர் செல்வம்.

எளிதாக சாலையோரம் கிடைக்கக்கூடிய சில வகை செடிகள் மற்றும் அடுப்புக்கரி, சாக்பீஸ் துகள்களைக் கொண்டு முதியவர் ஒருவர் சாலையோரம் உள்ள சுவற்றில் வண்ணம் தீட்டுவது அவ்வழியே செல்லும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாக சுற்று சுவற்றில் முதியவர் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.

இதனால் அவ்வழியே சென்ற ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அதாவது அந்த முதியவர் வரையக்கூடிய ஓவியத்திற்கு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய அடுப்புக்கரி துகள்கள் மற்றும் மூலிகைச் செடிகளைக் கொண்டு இயற்கையான எழில்கொஞ்சும் ஓவியம் ஒன்றை வரைந்தார். ஓவியங்களை வரைந்த செல்வம் என்ற இந்த முதியவர் தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து கற்பனை மூலமாக இதுபோன்று சாலையின் ஓரங்களில் உள்ள சுவற்றில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து அதனைப் பார்க்கும் பொதுமக்கள் தரக்கூடிய பணத்தை பெற்றுக்கொண்டு தன்அன்றாட பசியைப் போக்கி வருகிறார்.



Tags:    

Similar News