திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-09-05 10:29 GMT

திண்டுக்கல்லில் வஉசி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மேற்கு மாவட்ட அதிமுகவினர்

திண்டுக்கல்லில் வஉசி உருவச்சிலைக்கு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150வது பிறந்த நாள் விழா இன்று (05.09.2021) தமிழ்நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு சங்க தலைவருமான மருதராஜ் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ,பி ஜி எம் முரளி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் , மற்றும் வி.டி ராஜன், ராஜேஸ்கண்ணா, ரவிக்குமார், பிரபு ராம், தகவல் தொழில்நூட்ப பிரிவு நிறுவாகிகள் மணிகண்டன், மகாராஜகுமார், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், சிலம்பம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News